Friday, January 4, 2008

அங்கீகாரம்

கனவுகண்டே கழித்த காலங்களும் உண்டு
இப்பொழுதெல்லாம்
பொழுதுகளை நான் கழிப்பதேயில்லை.
இறந்த என் கனவுகளை
தோண்டி எடுக்கவோ
கனவுகளைக் காணவோ
எனக்கு நேரமிருப்பதில்லை
ஆசை ஆசையாய்
படித்த தமிழ் இலக்கியங்களை
மறுவாசிப்பு செய்யவோ,
என் அறிவினை எதிர்கால இந்தியாவோடு
பகிர்ந்துகொள்ளவோ
எனக்கு நேரமிருப்பதில்லை.
தமிழுக்குக் குரல்கொடுப்பேன்
என்ற போராட்ட வசனங்களையெல்லாம்
இன்று உச்சரிக்கவும்
மறந்துவிடுகிறேன்.....
அட்டவணை வாழ்க்கையில்
இயந்திரமாகிவிட்டேன்
ரேஷன் கார்டில்
குடும்பத் தலைவியான பிறகு.

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator