Monday, January 7, 2008

இருட்டு....

எனக்கு மிகவும் பரிட்சயமானது!
தாயின்
கருவறை தொடங்கி...

வார்த்தைக்குள் சிக்காத
ரணங்களின் முனகல்
எனக்கு மட்டுமே கேட்கும்
அசரிரீ!

பருவம் கடந்த
உணர்வுகளில்
பதுக்கிக் கொள்கிறேன்
"அடுத்தவங்க பாத்தா
தப்பா நெனப்பாங்க"

விழிதேடும் விரசங்களில்
நீள்கின்றன
என் உணர்ச்சிகளின்
நகங்கள்.....

கருவறையின்
கதகதப்பைத் தாண்டி
உணர்வுகளின்
கதகதப்போடு
வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
இருட்டில்.....

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator