Monday, January 7, 2008

திரை விலக்கி

இருபது ஆண்டுகளாய்
இறுக்கப்பட்ட தசைத் தொகுதி
தகித்துக் கொண்டிருந்த உணர்ச்சி
வீரிடுகையில்
கற்பென்ற கற்பிதமெல்லாம்
காணாமல் போய்விடுகிறது,
பால்பேதமின்றி
யாரும் அறியாமல்!

"பொண்ணுனா அடக்கமா இருக்கனும்"
அடங்கிவிடுகிறது
இதில் அனைத்துமே!

சார்புயிரியாய் எத்தனைக் காலம்?
எனக்காக ஓர் நாள்
என் ஆசைக்கு உயிர் கொடுத்து
என் உணர்ச்சிக்கு
விடுதலை கொடுக்கிறேன்....

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator