இருபது ஆண்டுகளாய்
இறுக்கப்பட்ட தசைத் தொகுதி
தகித்துக் கொண்டிருந்த உணர்ச்சி
வீரிடுகையில்
கற்பென்ற கற்பிதமெல்லாம்
காணாமல் போய்விடுகிறது,
பால்பேதமின்றி
யாரும் அறியாமல்!
"பொண்ணுனா அடக்கமா இருக்கனும்"
அடங்கிவிடுகிறது
இதில் அனைத்துமே!
சார்புயிரியாய் எத்தனைக் காலம்?
எனக்காக ஓர் நாள்
என் ஆசைக்கு உயிர் கொடுத்து
என் உணர்ச்சிக்கு
விடுதலை கொடுக்கிறேன்....
Monday, January 7, 2008
திரை விலக்கி
Posted by யோகப்ரபா at Monday, January 07, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment