Monday, January 7, 2008

என்னோடமொழி செத்துப் போச்சி

என்னோடமொழி செத்துப் போச்சி
அதோட எச்சம் கூட
இப்ப என்கிட்ட இல்ல,
ஆனா
ஏராளமான மொழி
இன்னக்கி எனக்குத் தெரியும்.
என்னோடமொழி செத்துப் போச்சே
இப்ப என் மொழிக்கும்
செம்மொழி அங்கீகாரம்
கொடுப்பீங்களா?
ஆனா
பதிவேதும் இல்லையே!
என் மொழியவச்சி
எனக்கு ராகம் போடத்தெரிஞ்சதே
தவிர,
கவிதை பாடத் தெரியல
எப்படி நிரூபிப்பேன்
என்னோட மொழிப் பழமைய
ஒருவேள,
என் அம்மாவுக்கு நெனவிருக்குமா?
எங்கபோயி தேடுவன்
என் மொழிய
உறவுகளுக்காய்
உருமாறிக் கொண்டது
என் மொழியும்!
எல்லா மொழிய விட
தமிழ் மொழிதான்
சிறந்ததுன்னு சிலர்
சொல்லறாங்க,
நறைய பணம் சம்பாதிக்கணும்னா
இங்கிலீசு நல்லா பேச தெரியனும்,
அப்படி இப்படினு
எல்லா மொழிக்கும்
ஏதோ ஒரு அடையாளம், சிறப்பு
சொல்லறாங்க
அப்ப என்னோட மொழிக்கு?
பரிணாம வளர்ச்சியில்
வால் எலும்பான
மிச்சம் கூட
என் மொழியில இல்ல
எங்க போச்சி?
என்ன ஆச்சி?
தெரியல
ஆனா ஒன்னு
நான் வளந்துட்டேன்.
எனக்கும் என் தாய்க்குமான
கருத்துப் பரிமாற்றத்தில்
உருக்கொண்ட
என் மொழி
கருவிலேயே கருகிடுச்சி!
ஒருவேள
இவளுக்குப் பொறந்தது
பொம்பள மொழியோ?

1 comment:

Unknown said...

Arumaiyana kavidhai.

Unnoda mozhi sethu poyirunthal indru intha kavithaiyai un mozhi intha ulagirku koduthirukadhu. Enavae, un mozhi sagavillai enpathai nee mudhalil unarndhu khol. Appothuthan un mozhiyin veeriyathai intha ulagirkku nee unartha mudiyum.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator